Thanga Jaisakthivel

தமிழ் சிறுகதைகள் Tamizh Short Stories

Arts TA ↓ 228 episodes

தமிழ் சிறுகதைகளை படிப்பது ஒரு சுகம் என்றால், கேட்பது மற்றொரு சுகம்!கதைகளைக் கேட்டுவிட்டு உங்கள் கருத்துக்களை கீழ்கண்ட முகவரிக்கு எழுதுபவர்களுக்கு தமிழகம் தொடர்பான ஒரு Antique அஞ்சல் அட்டை பதிலாக அனுப்பி வைக்கப்படும். கடிதங்களை எழுத வேண்டிய முகவரி:Thanga Jaisakthivel10, Kesava Perumal Koil East StreetMylaporeChennai - 600 004Tamil NaduIndiaகடிதம் எழுபவர்கள், உங்களின் தெளிவான முகவரியை எழுத மறவாதீர்கள்.“இதில் இடம்பெற்றுள்ள சிறுகதைகளின் ஆசிரியர்கள், பதிப்பாளர்கள், பதிவேற்றப்பட்டுள்ள சிறுகதையை நீக்கச் சொல்லும் பட்சத்தில், உடனடியாக நீக்கப்படும்”

Author

Thanga Jaisakthivel

Category

Arts

Latest episode

May 31, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

ஒரு குறிப்பிட்ட சந்தர்பத்தில் - சு.சமுத்திரம் 24.08.2021

மன நல மருத்துவர் எப்படி வைத்தியம் பார்ப்பார் என அறிந்துகொள்ள வேண்டுமா, இந்த கதையைக் கேளுங்கள். நீங்களே ஒரு மருத்துவரை பார்த்துவந்த அனுபவத்தினைக் கொடுக்கும் கதை தான் இந்த சு.சமுத்திரம் எழுதிய ‘ஒரு குறிப்பிட்ட சந்தர்பத்தில்’ 

இனிமே வராதே - மோ. கணேசன் 01.08.2021

அம்மா, அப்பாவின் மீது வைத்துள்ள அன்பு, திருமணம் ஆனபின்பு மகன்களின் கையறுநிலை, கொரோனா காரணமாக வேலையிழந்த மகன், என கதை சமகாலத்தினை மிக அழகாக பதிவு செய்து செல்கிறது. ‘இனிமே வராதே’ சிறுகதை மோ. கணேசனின் சிறப்பான எழுத்துக்கு சான்று. கூடுதலாக அவர் எழுதிய நாவலின் ஒரு பகுதியும் இதில் வாசிக்கப்பட்டுள்ளது.

காரல் மார்க்சும் தாணு ஆசாரியும் - தமிழவன் 30.07.2021

நம் கிராமங்களில் தான் எத்தனை வகையான மனிதர்கள். அவர்களை கொஞ்ச நேரமேனும் நீங்கள் அவதானித்து பார்த்துள்ளீர்களா? அப்படி இல்லை எனில் இனிமேலாவது பாருங்கள். ‘காரல் மார்க்சும் தாணு ஆசாரியும்’ அப்படியாக தமிழவன் பார்த்ததன் விளைவே. கேளுங்கள், நிச்சயம் நீங்கள் இனி  அவதானிப்பீர்கள்.

கணினி என் தோழன் - வாதூலன் 19.07.2021

வங்கியில் கணினி வந்த புதிதில் என்னவெல்லாம் நடந்தன என்பதை நம் கண் முன் கொண்டுவந்து நிறுத்தியுள்ளார் கணினி என் தோழன் சிறுகதையில்  வாதூலன். உங்களுக்கும் பிடிக்கும், கேளுங்கள்.

ரகசிய வேட்கை - சி.மோகன் 19.07.2021

சி.மோகன் அவர்களின் எழுத்து தெளிந்த நீரோடை. படிப்பவர்களை கட்டிப்போடக் கூடியது. அந்த வகையில் இந்த ரகசிய வேட்கை சிறுகதை அதற்கு ஒரு உதாரணம்.

கிணறு - எஸ்.சுந்தர்ராஜன் 12.07.2021

ஒரு கிணறு நகரத்து ஆசாமிக்கு எப்படி முக்கியமானதாக இருக்கிறது. தண்ணீர் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை மிக அழகாக கூறியுள்ளார். மிகவும் சுவாரஷ்யமாக எஸ்.சுந்தர்ராஜன் எழுதியுள்ளார்

ஒரு சம்சாரியின் பஞ்சங்கள் - அ.முத்தானந்தம் 12.07.2021

ஒரு சம்சாரிக்குத்தான் எத்தனை எத்தனை பிரச்சனைகள். அதுவும் பஞ்ச காலத்தில் இன்னும் அதிகம்.  அ.முத்தானந்தம் மிக அழகாக இந்த ஒரு சம்சாரியின் பஞ்சங்கள் சிறுகதையில் ஒரு வாழ்க்கையையே பதிவு செய்துள்ளார்.

கோடுகளுக்கு அப்பால் - சுந்தர்ராஜன் 05.07.2021

கிராமங்களில் கோலம் எதற்கு போடுகிறார்கள். நகர்புற வாழ்க்கையில் அது எப்படியெல்லாம் மாற்றம் அடைந்துவிட்டது என்பதை மிக அழகாக எடுத்துக்கூறியுள்ளார் சுந்தர்ராஜன். தமிழில் மிக அழகாக மொழிப்பெயர்துள்ளார் பாரதி சீனிவாசன்

ஹோமம் - எஸ்.எம்.ஏ.ராம் 05.07.2021

கதைகள் தான் நம்மை உயிர்போடு வைத்திருக்கின்றன. ஒவ்வொரு கதையும் ஒரு சம்பவத்தினை பொதிந்து வைத்திருக்கிறது. ஹோமம் சிறுகதையும் அந்த வகையில் மிக முக்கியமான ஒன்று. 

தீயடி அரவம் - அண்டனூர் சுரா 28.06.2021

ஒரு சம்பவம் நம்மை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதற்கு இந்த சிறுகதை ஒரு உதாரணம். ஒரு சம்பவத்திற்கு முன்பும் பின்பும் என்ன நடந்திருக்கும் என்பதை மிக அழகாக சொல்லிச் செல்கிறது இந்த சிறுகதை.

ஒரு டி.எம்.சி. கண்ணீர் - அண்டனூர் சுரா 19.06.2021

நாம் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று. நமக்கு பாதுகாப்பே இருக்காத இடத்தில் நாம் பாதுகாப்பாக இருப்பதும், நமக்கு இங்குதான் பாதுகாப்பு என்று நம்பிக்கையுடன் இருக்கும் இடத்தில் நமக்கான பாதுகாப்பு கேள்விக்கு உள்ளாவதைவை அண்டனூர் சுரா எழுதிய இந்த ஒரு டி.எம்.சி. கண்ணீர் சிறுகதை பேசுகிறது.

நிறங்கள் - வீர வேலுச்சாமி 14.06.2021

வீர வேலுச்சாமியிள் கதைகள் அனைத்தும், நம் கண் முன்னே நடக்கும் கதைகளே. அவரது கதை மாந்தர்கள் அனைவரையும் இந்த சமுதாயத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் பார்க்க முடியும். அந்த வகையில் ‘நிறங்கள்’ சிறுகதையும் முக்கியமான ஒன்று.

காதோலை - நாவல் குமாரகேசன் 28.05.2021

பேரிச்சம் பழத்தினை கொடுத்து இரும்பினை வாங்கும் வியாபாரிக்கும் ஆடு மேய்கும் காதோலைக்குமான சம்பாசனையும் சரி, கிராமங்களில் உள்ள சிறு தெய்வ கோவில்களில் நிலையையும் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார் நாவல் குமாரகேசன்.

காட்டுக் கீரை - நாவல் குமாரகேசன் 28.05.2021

ஒரு கீரைக்காக தன் தன்மானத்தினை இழக்க நேரிடும் சிறுவன். இன்றும் கிராமங்களில் ஆதிக்க சாதியால் நடக்கும் அடக்குமுறையை பதிவுசெய்திருக்கும் மிக முக்கிய சிறுகதை.

உண்மை உறங்காது - சோமாரி முருகன் 28.05.2021

தாய் தந்தையரின் அன்புக்கு எதையும் ஒப்பிட முடியாது, அதிலும் அம்மா தனது குழந்தைகள் மேல் வைத்திருக்கும் அன்புக்கு ஈடேது. என்ன தவறு செய்தாலும் அதை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் அன்பு அம்மாவுடையது என்கிறார் சோமாரி முருகன். தற்பொழுது ‘மஞ்சல்கயிறு’ எனும் நாவலை எழுதியுள்ளார். 

வனம்மாள் - அழகியபெரியவன் 18.05.2021

மரத்திற்கும் மனிதனுக்குமான உறவு எவ்வளவு முக்கியமானது. மரத்திற்கும் உயிர் உண்டு. நீங்கள் அதனோடு பேசியுள்ளீர்களா? இந்த சிறுகதையைக் கேளுங்கள் கண்டிப்பாக பேசுவீர்கள்.

ரேஷன் கார்டு - பூமி பாலகன் 15.05.2021

அரசு அலுவலகங்கள் எப்படி செயல்படுகிறது? ஒரு சாதாரண குடிமகன் அந்த அலுவலகங்களை எளிதாக அணுக முடியாத ஒன்றாக இருப்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளார் பூமி பாலகன்.

நிம்மதி - பூமி பாலகன் 15.05.2021

நம் அனைவருக்கும் மறதி தவிர்க்க முடியாத ஒன்று தான். வீட்டில் உள்ள கேஸ், லைட் சுவிட்ச் போன்றவற்றை மறக்காமல் ஆஃப் செய்தோமா? என்று அனைவருக்கும் சந்தேகம் வரும். இந்த கதையையும் அதை மையச்சரடாக வைத்தே பூமி பாலகன் எழுதியுள்ளார்.

ஏழு முனிக்கும் இளைய முனி - சி.எம்.முத்து 14.05.2021

ஏழு முனிக்கும் இளைய முனி - சி.எம்.முத்து

அப்புவின் சத்யஜித்ரே ஸ்டாம்ப் - நரேன் குமார் 10.05.2021

தாத்தாவிற்கும் பேரனுக்குமான உறவினை மிக அழகாக பதிவுசெய்துள்ளார் நரேன். அதுவும் அந்த கடிதம், அஞ்சலகம், அனைத்தின் ஊடாக நம்மையும் பயணிக்க வைக்கிறது. 

இ.பி.சீ. 1927 - இரா.சின்னதுரை 10.05.2021

மலேசியாவில் நடக்கும் கதை. சீனாவில் முடிகிறது. மறக்க முடியாத காதல் கதை. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையை மிக அழகாக எழுத்தில் வடித்துள்ளார் இரா.சின்னத்துரை

நூறாவது கடிதம் - இரா. சின்னதுரை 10.05.2021

கடிதம் என்ன செய்யும். அதுவும் 100 கடிதங்கள் எழுதும் ஒரு பெண் தனது குடும்பத்தினை எப்படி இணைக்கிறார் என்பதே கதை.

கோடாரி - பிரமிள் 07.05.2021

1967-ஆம் ஆண்டில் பிரமிள் எழுதிய ‘கோடாரி’ கதையும் ஈழத்துப் பிரச்சினையை  மூலமாகக் கொண்டது. அறுபதுகளில் ஆயுதமேந்திய போராட்டம் நடைபெறவில்லை. இரு  பக்கத்து அரசியல்களும் மொழியின்வழியே முரண்பாட்டினைக் கூர்மையடையச் செய்திட  முயன்று கொண்டிருந்தனர். இது பிரமிளுக்கு உறுத்தலாக இருந்திருக்கின்றது.  எனவே தான் பெரும்பான்மையினருக்குக் கடவுளின் உருவாகத் தோன்றும் அரசமரம்.  சிறுபான்மையினருக்...

சிபிகள் - மேலான்மை பொன்னுசாமி 07.05.2021

சிபிகள் - மேலான்மை பொன்னுசாமி

சேதாரம் - தனுஷ்போடி 30.04.2021

சேதாரம் - தனுஷ்போடி

Listen to the தமிழ் சிறுகதைகள் Tamizh Short Stories podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.