SARAVANANARUNACHALAM
TAMIL PODCAST IN CUDDALORE. தமிழால் இணைவோம் வழங்குபவர் KANKALAI@SARAVANANARUNACHALAM
பலமொழிகட்குத் தலைமையும், மிக்க மேதமையும் உடையமொழி உயர்மொழி, தனித்து இயங்க வல்ல ஆற்றல் சார்ந்ததுதனிமொழி. திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்தியதூய்மொழி செம்மொழி. ஆயின் தமிழ் உயர் தனிச் செம்மொழியாம்- பரிதிமாற் கலைஞர். எனக்கு பிடித்த தமிழ் இலக்கியங்கள், சங்க கால நூல்கள், மாணவச்செல்வங்களுக்கான நூல்கள், சிறுகதைகள், பாடல்கள், மொழிப்பெயர்ப்பு கட்டுரைகள் வாசிப்பது பிடிக்கும். இணையதளத்தில் நான் தேடிப்படித்த சிறுகதைகள் உங்கள் செவிகளுக்கு விருந்தாக அளிக்கிறேன்.
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
சிவபுராணம் 02.05.2020 28:05
தமிழ் பேசும் சிவனடியார்கள் வாயெல்லாம் மணக்கின்ற பதிகம் சிவப்பிரகாசம்.மாணிக்கவாசகப்பெருமான் பரம்பொருளாகிய சிவபெருமான் எவ்வாறெல்லாம் விளித்து அவர் பூவார் திருவடிகளுக்கு தம்முடைய உளமார்ந்த வணக்கங்ஙளை கூறித் துவக்குகிறார்.
கம்பர் நூல்கள் _அறிமுகம் 02.05.2020 3:53
கம்பர் 12 ம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்.கவிச்சக்கரவர்த்தி என்ற பட்டமும் உண்டு.இவர் கம்ப ராமாயணம்,ஏரெழுபது,திருக்கை வழக்கம்,சரஸ்வதி அந்தத்தி,சடகோபர் அந்தத்தி,சிலையெழுபது முதலிய ஒன்பது நூல்களை எழுதியுள்ளார்
சைவ சித்தாந்த சாத்திரங்கள்_விவரம் அறிவோம். 02.05.2020 4:22
சைவ சித்தாந்த நூல்கள் மொத்தம் 14 ஆகும்.இவை 6,7,8 ம் நூற்றாண்டில் தோன்றியது.
ஔவையாரின் நல்வழி-நூல் அறிமுகம். 02.05.2020 4:39
ஔவையாரின் நூல்களில் ஒன்று நல்வழி. இந்நூலில் 41 பாடல்கள் உள்ளன. கடவுள் வாழ்த்துப்பாடல் ஒன்றும், 40பாடல்களும் உள்ளன.வெண்பாவில் அமைந்தவை.
சங்க கால இலக்கியங்களில் எட்டுத்தொகையும்_பத்துப்பாட்டும். 01.05.2020 4:25
சங்க இலக்கியங்களில் முக்கியமானவை எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் ஆகும்.ஈட்டுத்தொகை நூல்கள்.1.நற்றினை2. குறுந்தொகை3. ஐங்குறுநூறு4. கலித்தொகை5. அகநானூறு6. பதிற்றுப்பத்து7 . புறநானூறு 8. பரிபாடல். பத்துப்பாட்டு நூல்கள்_1. திருமுருகாற்றுப்படை2. பொருநராற்று படை3. சிறுபாணாற்றுப்படை4. பொரும்பாணாற்றுப்படை5. மலைபடுகடாம்6. மதுரைக்காஞ்சி7. குறிஞ்சிப்பாட்டு8. பட்டினப்பாலை9. முல்லைப்பாட்டு10.நெடுநல்வாடை என்பதா...
ஔவையாரின் கொன்றைவேந்தன் பகுதி_1 01.05.2020 16:14
கொன்றைவேந்தன் ஔவையார் இயற்றிய ஒரு தமிழ் நீதிநூல்.இது முருகக்கடவுளைப் போற்றிப்பாடும் நூலாகும்.இதில் மொத்தம் 91 பாடல்கள் உள்ளன. பகுதி1 ல் 46 பாக்களும் உரையும் வழங்கப்பட்டுள்ளது.
திருமூலரின் திருமந்திரமும் திருவள்ளுவரின் திருக்குறளும் _6 01.05.2020 5:05
திருமந்திரத்தில் வான்சிறப்பு எனும் தலைப்பில் அமுதூறு மாமழை என்ற பாடலும்,திருக்குறளில் வான்சிறப்பு அதிகாரத்தில் உள்ள வான்நின்று எனத்தொடங்கும் குறள் உரையுடன்....
திருமூலரின் திருமந்திரமும் திருவள்ளுவரின் திருக்குறளும்_5 01.05.2020 2:16
திருமூலரின் திருமந்திரத்தில் அறஞ்செய்வான் திறம்பட என்ற தலைப்பில் ,யாவர்க்கு மாம்இறை எனத் தொடங்கும் பாடலும்,அரியவற்று ளெல்லாம் எனத்தொடங்கும் குறளும் உரையுடன்....
சிறுபஞ்சமூலம்_ நூல் அறிவோம். 30.04.2020 2:05
தமிழ் மொழியில் சிறப்புவாய்ந்த பல ஆயிரம் நூல்கள் உள்ளன.இவற்றில் பதினென்கீழ்கணக்கு நூல்கள் முக்கியமானது. சிறுபஞ்சமூலமும் அதில் ஒன்று. இயற்றியவர்-காரியாசான் எனும் புலவர்.வாழ்க்கைத் துன்பங்களைப்போக்கும் 5உண்மைகளை ஒவ்வொரு பாடலிலும் அடுக்கிக் கூறும் நூல்.
ஏலாதி_நூல் அறிவோம். 30.04.2020 2:17
பதினென் கீழ்கணக்கு நூல்களில் ஒன்று-ஏலாதி.இயற்றியவர்_கணிதமேதாவியார்.ஆறு அறநெறிக்கருத்துக்களை கூறும் நூல்.இதில் 82 பாடல்கள் உள்ளன.
திருமூலரின் திருமந்திரமும் திருவள்ளுவரின் திருக்குறளும்-2 30.04.2020 3:48
திருமந்திரத்தில் சிவநிந்தை எனும் தலைப்பில் ஓரெழுத் தொருபொருள்...எனத்தொடங்கும் பாடலும்,திருக்குறளில் புறங்கூறாமை எனும் அதிகாரத்தில் பகச்சொல்லி ..எனத்தொடங்கும் குறளும் உரையுடன் வழங்கப்பட்டுள்ளது.
திருமூலரின் திருமந்திரமும், திருவள்ளுவரின் திருக்குறளும் 29.04.2020 2:17
திருமூலரின் திருமந்திரத்தில் சிவநிந்தை என்றத்தலைப்பில் அப்பகையாலே எனத்தொடங்கும் பாடலும்,திருக்குறளில் பகைத்திறந்தெரிதல் எனும் அதிகாரத்தில் உள்ள பகைஎன்னும் எனத் தொடங்கும் திருக்குறளும், ஏமுற் றவரினும் எனத்தொடங்கும் குறளும் உரையுடன் வழங்கபட்டுள்ளது.
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.