rams

தமிழ் சிறுகதைகள் , Tamil Short stories

Society TA ↓ Επεισόδια: 200

Do you want to listen to good Tamil short stories? Try my podcasts!! I wish to promote tamil stories and to motivate reading. . .Please do suggest good stories that can be recorded here. . .As comments dont seem to be enabled in india, please email me ur feedback to rams.villageres@gmail.comபடிக்க இப்போது பலருக்கு நேரமில்லை. அப்படியே படித்தாலும், வார மாத இதழ்களில் வரும் தரமற்ற வணிக எழுத்துகளையே படிக்க வேண்டிய நிலை. முன்னோடி எழுத்தாளர்களின் நல்ல தரமான சிறுகதைகளை ஒலி வடிவில் பதிவு செய்து தருகிறேன். கேட்டு மகிழுங்கள், தேடிப் படியுங்கள்!! Update:

Δημιουργός

rams

Κατηγορία

Society

Ιστοσελίδα του podcast

podcasters.spotify.com

Τελευταίο επεισόδιο

8 Ιουν 2026

Πού να ακούσεις;

Podcast στην εφαρμογή Replaio Radio Έρχεται σύντομα

Τα podcast έρχονται σύντομα στην εφαρμογή. Εγκατάστησέ την τώρα και δες πρώτος μια εντελώς νέα προσέγγιση στα podcast

Κατέβασέ το από το Google Play Δωρεάν εγκατάσταση Android σχεδόν 10 εκατ. λήψεις · βαθμολογία 4,8 iOS σύντομα

Επεισόδια

74. சோகவனம் - சோ.தர்மன் 31.08.2019

காடுகள் அழிவதனால் ஏற்படும் பேரிடர்களைப் பற்றி அறிவோம். இந்த சோ.தர்மனின் கதை நாம் அஞ்சி நடுங்கும்படியான ஒரு சாத்தியத்தைப் பேசுகிறது. இப்படியும் நடந்து விடுமோ? கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்!

73. ஐந்தாவது மருந்து - ஜெயமோகன் 26.08.2019

நோய்களை உண்டாக்கும் கிருமிகளும் அவற்றுக்கு எதிராக மனிதன் உருவாக்கும் மருந்துகளும் ஒன்றுக்கொன்று போட்டிபோட்டு முன்னேறுகின்றன. ஜெயமோகனின் ஒரு நல்ல அறிவியல் புனைவு.

72. பஞ்சத்து ஆண்டி - தி. ஜானகிராமன் 24.08.2019

திடீரென்று வந்த கெட்டகாலத்தால் தனக்குத்தெரிந்த ஒரே வேலையான நெசவு வேலையையும் இழக்கிறான் நன்னயன். பெண்டாட்டி பிள்ளைகளுடன் நடுத்தெருவில் நிற்கிறான். பிச்சை எடுத்து தான் சாப்பிட வேண்டும். ஆனால் பிச்சை எடுக்கத் தெரியவில்லை அவனுக்கு. அவன் நிலை பார்த்து இரங்கும் ஒரு ஏழை குரங்காட்டி - ஏழைக்கு ஏழை தானே இரங்குவான்! - தன்னுடைய பழக்கப்பட்ட ஒரு குரங்கு குட்டியைக் கொடுத்து வித்தை காட்டி பிழைத்துக் கொள்ள சொல்கிற...

71. பிரயாணம் - அசோகமித்திரன் 22.08.2019

"மனிதனை உருவாக்கிய ஆதிமனஎழுச்சிகளே அவனுடைய அன்றாட யதார்த்தத்துக்கு  முன்னால் அர்த்தமிழந்து கிடப்பதைக் காட்டும் கதைகளில் ஒன்று இது. நமது யோக  மரபு பல்லாயிரம் வருடத்து பாரம்பரியம் உள்ளது. அதற்காக பல்லாயிரம்பேர்  தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கிறார்கள். தன் வாழ்நாளெல்லாம் அதற்காக  ஒவ்வொரு கணத்தையும் செலவிட்டவர் இந்த குரு. ஆனால் கடைசியில் மரணம் - உயிரின்  வாழ்வாசை என்ற இரு...

70. ரத்னாபாயின் ஆங்கிலம் - சுந்தர ராமசாமி 20.08.2019

மனித வர்கத்தின் போலியான பற்றுதல்களை சு ரா வின் இந்தக் கதை சுட்டிக்காட்டுகிறது. அலங்கார வார்த்தைகளால், வெறுமையாகிவிட்ட தன் வாழ்க்கையை நிரப்பிவிட முனைகிறாள் ரத்னாபாய். 1976ல் எழுதப்பட்டது.

69. இரத்தம் - மு. தளையசிங்கம் 18.08.2019

மு. தளையசிங்கத்தின் இந்தக் கதை பதில் சொல்ல முடியாத கேள்விகளை எழுப்புகிறது. அடக்குமுறையை அநியாயத்தை எதிர்கொள்ள சமுதாயத்தின் நற்பண்புகள் மட்டுமே போதுமானவையா? அவை வெளிக்காட்ட வேண்டிய எதிர்வினைகளை குறுக்கிவிடுகின்றனவா? ஈழத் தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளின் ஒரு சிறு அணுவை இக்கதை காட்டும்போதே நெஞ்சு வலிக்கிறது.

68. ஒரு பழைய கிழவரும் ஒரு புதிய உலகமும் - ஆதவன் 17.08.2019

தலைமுறை இடைவெளி என்று ஒதுக்க முடியாத சில விவாதங்களையும் தொட்டுச் செல்லும் இந்த ( நீளமான) சிறுகதை இந்த வாட்ஸப் யுகத்தில் சற்று கடினமான வாசிப்பு தான்!

67. பூனைகள் இல்லாத வீடு - சந்திரா 15.08.2019

ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தின் பந்தங்களை, உணர்வுகளை படம் பிடித்துக் காட்டும் கதை.

66. மரப்பாச்சி - உமா மகேஸ்வரி 13.08.2019

உமா மகேஸ்வரி எழுதியது. குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலினக் கொடுமை பற்றியது.

65. தாயார் திருப்தி - கு.ப.ரா 12.08.2019

கு.ப. ரா எழுதிய சிறுகதை. மந்திரங்களை விட மனிதத் தன்மை முக்கியம் என்று சொல்லும் சின்னஞ்சிறு கதை.

64. ரெயில்வே ஸ்தானம் 11.08.2019

மகாகவி பாரதியாரின் சிறுகதை.

63. ஒரு வருடம் சென்றது - சா. கந்தசாமி 09.08.2019

ச. கந்தசாமி எழுதிய சிறுகதை. கல்விமுறையில் இருக்கும் குறைபாடுகளை, குழந்தைகளின் மனப்போக்கை, அதை உணர்ந்து கொள்ள மறுக்கும் பெரியவர்களை என்று பல விஷயங்களை தொட்டுச் செல்கிறது.

62. அவ்வா - சாரு நிவேதிதா 07.08.2019

சாரு நிவேதிதா எழுதிய சிறுகதை.

61. ஒரு இந்நாட்டு மன்னர் 05.08.2019

நாஞ்சில் நாடன் 1977ல் எழுதியது. நிலைமை இன்னும் அப்படியே தான் இருக்கிறது. இன்னமும் மோசம் தான் அடைந்திருக்கிறது.

60. சிங்கப்பூர் சென்ற மகன் - கு. அழகிரிசாமி 30.07.2019

ஒரு தாயின் வேதனை, ஆற்றாமை: சுற்றத்தின் புரிதலோடு கூடிய ஆதரவு: நெகிழ வைக்கிறார் கு. அழகிரிசாமி.

59. ஒரு லட்சம் புத்தகங்கள் - சுஜாதா 29.07.2019

சுஜாதாவின் சிறுகதை. ஈழத் தமிழர்களின் துன்பங்களையும், தமிழ்நாட்டவரின் கொடூரமான சுய நலத்தையும் அழுத்தமாக காட்டியிருக்கிறார்.

58. பேனாக்கள் - பூமணி 28.07.2019

1978ல் பூமணி எழுதிய சிறுகதை

57. மிஷின் யுகம் - புதுமைப்பித்தன் 27.07.2019

புதுமைப்பித்தன் எழுதிய சிறுகதை

56. நகரம் - சுஜாதா 24.07.2019

சுஜாதாவின் சிறுகதை. அரசு மருத்துவமனைகளின் அவலத்தை படம் பிடித்துக் காட்டுவது.

55. காலத்தின் விளிம்பில் - பாவண்ணன் 21.07.2019

பாவண்ணன் எழுதிய சிறுகதை. முதுமையின் தனிமையை நுட்பமாக சித்தரிக்கும் படைப்பு.

54. பாடலிபுத்திரம் - ஜெயமோகன் 19.07.2019

ஜெயமோகன் எழுதிய சிறுகதை.

53. யானையின் சாவு - சார்வாகன் 14.07.2019

மாறும் குழந்தைகள், மாற முடியாத பெரியவர்கள்!! சார்வாகன் அவர்களின் அருமையான சிறுகதை.

52. பிராந்து - நாஞ்சில் நாடன் 03.07.2019

நாஞ்சில் நாடன் சிறுகதை

51. வேட்டை - பவா செல்லதுரை 23.06.2019

பவா செல்லதுரையின் கதை

50. ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் - ஆதவன் 21.06.2019

ஆதவன் எழுதிய சிறுகதை

Άκου το podcast தமிழ் சிறுகதைகள் , Tamil Short stories στο Replaio

Ραδιόφωνο και podcast σε μία εφαρμογή - δωρεάν, χωρίς εγγραφή. Εγκατάστησέ την σήμερα και μη χάσεις την πρεμιέρα

Κατέβασέ το από το Google Play

Το Replaio δεν είναι εκδότης podcast - τα ονόματα των εκπομπών, τα εξώφυλλα και ο ήχος ανήκουν στους δημιουργούς τους και διανέμονται μέσω δημόσιων ροών RSS