aahanalvaanoli

ஆகநல் வானொலி (Aahanal Vaanoli)

Kids TA ↓ 340 episodes

2012 ஆம் ஆண்டு தைப்பொங்கல் நாளன்று ஆகநல் பள்ளி வளாகத்தில் திறக்கப்பட்ட இவ்வானொலி நிலையம் (AGN CRS, Salem, Tamilnadu) மத்திய அரசின் அனுமதியுடன் 17-02-2014 முதல், தனது முறையான ஒலிபரப்பை தொடங்கியது. கல்வி, கலாச்சாரம், சுகாதாரம், உடல்நலம், சுற்றுசூழல், விவசாயம், கலை இலக்கியம் முதலிய பல்வேறு தலைப்புகளில் நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டு பண்பலை 91.2 MHZ அலைவரிசையில் தினமும் ஒலிபரப்பாகின்றது ஆகநல் வானொலி கொங்கணாபுரத்தில் அமைந்துள்ளது. Tamil radio podcast in Aahanal Vaanoli 91.2, Konganapuram, Salem, Tamilnadu

Author

aahanalvaanoli

Category

Kids

Podcast website

podcasters.spotify.com

Latest episode

Jan 30, 2025

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

மகளிர் நாள் சிறப்பு நிகழ்ச்சி - அப்பு மாணவிகள்-செந்தில்குமார் துரைசாமி- பாலமுருகன் கணபதி 08.03.2022

மகளிரின் சிறப்பினை போற்றும் மார்ச் 8 ஆம் நாளில் அவர்களின் பெருமையை போற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது இந்த நிகழ்ச்சி. அப்பு அறிவாலய மாணவிகள், செந்தில்குமார் துரைசாமி மற்றும் பாலமுருகன் கணபதி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கான இசை Music by Audionautix.com       #march8

இருண்ட வீடு - பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள்-செந்தில்குமார் துரைசாமி -தொடர்-1 08.03.2022

எப்படியெல்லாம்  ஒரு வீடு இருக்கக்கூடாது, எப்படியெல்லாம் ஒரு குடும்பம் வாழக்கூடாது, ஒரு நல்ல குடும்பம் எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதை மக்களுக்கு உணர்ந்திட பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் இயற்றப்பட்டதே இந்த "இருண்ட வீடு"   இக்கதையில் அறியாமை இருளில் இருக்கக்கூடியவர்கள் செய்யக்கூடிய தவறுகளை உணர்ந்து அவற்றிலிருந்து தங்களை விலக்கிக்கொண்டு, கல்வி எனும்  வெளிச்சத்தின் துணையோடு...

"அனுபவம் பேசுது" - பாலமுருகன் கணபதி - இம்சை அரசன் - தொடர்-2 07.03.2022

அனுபவம் பேசுது  பாலமுருகன் கணபதி, ஆகநல் வானொலி  music by audionautix.com

"நட்பே துணை" - சிறுகதை நேரம் (2021-22) - லக்சிகா - செந்தில்குமார் துரைசாமி - பாலமுருகன் கணபதி - தொடர்-51 05.03.2022

நட்பின் இலக்கணத்தை பற்றி நேயர்களுக்கு எடுத்துரைக்கிறது இக்கதை 

பாரதிதாசன் கவிதை - அப்பு மாணவர்கள் 04.03.2022

பாரதிதாசன் கவிதை - அப்பு மாணவர்கள் 

கோவிட் நோய்த்தொற்று கட்டுப்பாடுகள் மேலும் தளர்வு -சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.கார்மேகம் இ.ஆ.ப., அவர்கள் - தகவல் நேரம் -16 03.03.2022

கோவிட் நோய்த்தொற்று கட்டுப்பாடுகள் மேலும் தளர்வு சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.கார்மேகம் இ.ஆ.ப., அவர்கள்  தகவல். Music by Jason shaw@audionautix.com

நேயர்கள் துளசம்பட்டி சுதாகர் மற்றும் ஈரோடு இளங்கோ அவர்களுடனான உரையாடல் - அப்பு மாணவர்கள்-பாலமுருகன் கணபதி - நேர்காணல் நேரம் -7 03.03.2022

நேயர்கள் துளசம்பட்டி சுதாகர் மற்றும் ஈரோடு இளங்கோ அவர்களுடனான வானொலி நிகழ்ச்சிகள் மற்றும் நேய உறவுகளை பற்றிய  உரையாடல் நிகழ்ச்சி

"அவசரப்படாதே" - சிறுகதை நேரம் (2021-22) - செந்தில்குமார் துரைசாமி - பாலமுருகன் கணபதி - தொடர்-50 02.03.2022

அவரசரப்பட்டு நாம் செய்யும் ஒரு செயலானது தவறான விளைவுகளை தரக்கூடியது என்பதை விளக்குகிறது இக்கதை 

வேலைவாய்ப்பு தகவல் - சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்ப-சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.கார்மேகம் இ.ஆ.ப., அவர்கள் - தகவல் நேரம் -15 02.03.2022

சேலம் மாவட்டத்தில்  சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை  மையத்தில் பணிபுரிய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்ப-சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.கார்மேகம் இ.ஆ.ப., அவர்கள்  தகவல் Music by Jason shaw @audionatix.com

"தூண்டிலை கொடு" - சிறுகதை நேரம் (2021-22) - செந்தில்குமார் துரைசாமி - பாலமுருகன் கணபதி - தொடர்-49 01.03.2022

ஒருவனுக்கு உணவினை தானமாக வழங்குவதைக்காட்டிலும் அந்த உணவு பெறுவதற்கான உழைப்பை கற்று தருதலே சிறந்த நற்செயலாகும் என்பதை விளக்குகிறது இக்கதை 

"எதுகையும் மோனையும்"-அப்பு அறிவாலயம் பள்ளி கதம்பம்-தொடர் -9 16.02.2022

இந்நிகழ்ச்சியில் எதுகை மோனை குறித்த தகவல்களை சிலப்பதிகார காட்சியின் மூலம் விளக்குகிறார்கள்  அறிவாலயம் பள்ளி மாணவர்கள்  Music by JasonShaw@audionautix.com

"போனவர்கள் வந்தார்கள்" - சிறுகதை நேரம் (2021-22) - செந்தில்குமார் துரைசாமி - பாலமுருகன் கணபதி - தொடர்-48 16.02.2022

பெற்றோர்களுக்கும் பெரியவர்களுக்கும் நாம் செய்யவேண்டிய கடமைகளை அதற்குரிய காலங்களில் செய்தல் வேண்டும் விளக்குகிறது இக்கதை. 

"வந்தவழியே சென்றது" - சிறுகதை நேரம் (2021-22) - செந்தில்குமார் துரைசாமி - பாலமுருகன் கணபதி - தொடர்-47 15.02.2022

நம் உழைப்பால் கிடைக்காத எந்தவொரு பொருளும் நம்மிடம் நிலைக்காது என்பதையும் அவ்வாறு கிடைத்த  பொருளானது பல ஆண்டுகள் கழித்தும்கூட நமக்கு நல்ல பாடத்தை கற்றுத்தரும் என்பதையும் இக்கதையின் வழியே நாம் அறிந்துகொள்ளலாம் 

வெண்டைக்காயின் மகத்துவம் -அப்பு அறிவாலயம் பள்ளி கதம்பம்-தொடர் -8 10.02.2022

இந்நிகழ்ச்சியில் வெண்டைக்காய் குறித்த தகவல்கள், பயன்கள் மற்றும் சமைக்கும் முறைகள் குறித்து கூறுகிறார்கள் அப்பு அறிவாலயம் பள்ளி மாணவர்கள் தர்ஷன் குமரேசன், அனன்யா சங்கர்,தர்ஷ்வந்த் மணிமுத்து, தீபிகா சங்கர் மற்றும் ஜொகனா ஜோசுவா.  வெண்டைக்காய்  கவிதை : பாலமுருகன் கணபதி  ஆக்கம் : ஆகநல் வானொலி  Music by JasonShaw @audionautix.com

"பூசணிக்காய் அளவு என்ன" - சிறுகதை நேரம் (2021-22) - செந்தில்குமார் துரைசாமி - பாலமுருகன் கணபதி - தொடர்-46 09.02.2022

ஒரு இலக்கை நோக்கிய பயணத்தில் வீண்பேச்சு என்பது அந்த இலக்கை அடைவதையே கெடுத்து விடும் எனவே வீண்பேச்சு பேசுதலை தவிர்த்தல் வேண்டும் என்பதை விளக்குகிறது இக்கதை 

இதுதான் வாழ்க்கை - நந்தா தங்கராஜு - சிறுகதை 08.02.2022

எதுதான் வாழ்க்கை என்பவர்களுக்கு இதுதான் வாழ்க்கை என்பதை விளக்குகின்ற வகையில் ஒரு அருமையான கதையினை வழங்குகிறார் மாணவர் நந்தா தங்கராஜு 

நல்ல தீர்ப்பு-நாடகம் -அப்பு அறிவாலயம் பள்ளி கதம்பம்-தொடர் -7 05.02.2022

தனது அன்னையின் தோழியால் ஏமாற்றப்படும் பெண் ஒருவர், அறிவுக்கூர்மை மிக்க நீதிபதி ஒருவரால்  காப்பாற்றப்படுகிறார்.மேலும் வார்த்தைகளால் ஏமாற்றும் அப்பெண்ணை வார்த்தைகளிலேயே மடக்கி நீதியினை வழங்குகிறார் நீதிபதி. 

"முயன்றால் முடியும் " - சிறுகதை நேரம் (2021-22) - தானியாஸ்ரீ தண்டபாணி - பாலமுருகன் கணபதி - தொடர்-45 05.02.2022

வாழ்வில் எத்துணை  தடங்கல்கள் இருந்தாலும் முயற்சித்தால் வென்றுவிடலாம் என்பதை விளக்குறது இக்கதை 

"சேவலும் நரியும்" - சிறுகதை நேரம் (2021-22) - செந்தில்குமார் துரைசாமி - பாலமுருகன் கணபதி - தொடர்-44 05.02.2022

உலகில் நல்லவர்களும் தீயவர்களும் கலந்தே இருப்பார்கள் இருவரையும் பிரித்து அறிந்து பழகுவதே வாழ்விற்கு நன்மை பயக்கும் என்பதை விளக்குகிறது இக்கதை 

"நவராத்திரி பரிசு" - திருமதி சரோஜா ராமமூர்த்தி அவர்கள் - சிறுகதை நேரம் - தொடர்-43 (2021-22) - பாலமுருகன் கணபதி 04.02.2022

இக்கதை குழந்தைகளின் கோபம், ஏக்கம் மற்றும் பாசம் ஆகியவற்றை  கொலு வைத்தலை மையமாகக்கொண்டு எழுதப்பட்டுள்ளது 

"சிரிக்க சிந்திக்க" - சிறுகதை நேரம் - தொடர்-42 (2021-22) - பாலமுருகன் கணபதி 02.02.2022

இக்கதை ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கான பொறுப்பினை நயத்துடன் எடுத்துரைக்கிறது 

"இது அதுவல்ல" - சிறுகதை நேரம் - தொடர்-41 (2021-22) - பாலமுருகன் கணபதி 01.02.2022

நன்றி மறந்த வியாபாரி ஒருவர் மனம் திருந்திய இக்கதையின் வழியே நல்ல பண்புகளை நேயர்களின் மனதில் விதைக்கிறது இக்கதை 

தேசிய தொழுநோய் எதிர்ப்புதினம் - சிறப்பு நேர்காணல் நேரம்- மருத்துவர் குமுதா அவர்கள், துணை இயக்குனர் - மாவட்ட தொழுநோய் தடுப்பு மையம், சேலம் - தொடர்-6 30.01.2022

தேசிய தொழுநோய் எதிர்ப்புதினமான இன்று தொழுநோய் குறித்த பல்வேறு விழிப்புணர்வு தகவல்களை நமக்கு வழங்குகிறார் மருத்துவர்.குமுதா, துணை இயக்குனர், மாவட்ட தொழுநோய் தடுப்பு மையம், சேலம் அவர்கள் 

"வாய்ச்சொல்லில் வீரன் " - சிறுகதை நேரம் - தொடர்-40 (2021-22) - செந்தில்குமார் துரைசாமி 29.01.2022

தேவையற்ற தற்பெருமையினால் ஏற்படும் விளைவுகளை விளக்குகிறது இக்கதை 

"ஐந்து விரல்கள் " - சிறுகதை நேரம் - தொடர்-39 (2021-22) - செந்தில்குமார் துரைசாமி 27.01.2022

அனைவரும் சமமே கடமையுணர்ந்து கடமையாடும்பொழுது என்பதை விளக்குகிறது இக்கதை 

Listen to the ஆகநல் வானொலி (Aahanal Vaanoli) podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.