aahanalvaanoli

ஆகநல் வானொலி (Aahanal Vaanoli)

Kids TA ↓ 340 epizód

2012 ஆம் ஆண்டு தைப்பொங்கல் நாளன்று ஆகநல் பள்ளி வளாகத்தில் திறக்கப்பட்ட இவ்வானொலி நிலையம் (AGN CRS, Salem, Tamilnadu) மத்திய அரசின் அனுமதியுடன் 17-02-2014 முதல், தனது முறையான ஒலிபரப்பை தொடங்கியது. கல்வி, கலாச்சாரம், சுகாதாரம், உடல்நலம், சுற்றுசூழல், விவசாயம், கலை இலக்கியம் முதலிய பல்வேறு தலைப்புகளில் நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டு பண்பலை 91.2 MHZ அலைவரிசையில் தினமும் ஒலிபரப்பாகின்றது ஆகநல் வானொலி கொங்கணாபுரத்தில் அமைந்துள்ளது. Tamil radio podcast in Aahanal Vaanoli 91.2, Konganapuram, Salem, Tamilnadu

Mindenképp látogasd meg a podcast oldalát, és támogasd a készítőjét: podcasters.spotify.com

Szerző

aahanalvaanoli

Kategória

Kids

A podcast weboldala

podcasters.spotify.com

Legutóbbi epizód

2025. jan. 30.

Hol hallgathatod?

Podcastok az alkalmazásban Replaio Radio Hamarosan

A podcastok hamarosan megérkeznek az alkalmazásba. Telepítsd most, és láss elsőként egy teljesen új megközelítést a podcastokhoz

Letöltés a Google Play-ről Telepítsd ingyen Android közel 10 M letöltés · 4,8-as értékelés iOS hamarosan

Epizódok

உலக காசநோய் விழிப்புணர்வு நாள் (மார்ச் -24) சிறப்பு வினாடி வினா நிகழ்ச்சி - மாவட்ட காசநோய் தடுப்பு மையம் - ஆகநல் வானொலி - பாலமுருகன் கணபதி - ஆகநல் அப்பு மாணவ மாணவிகள் 24.03.2023

உலக காசநோய் விழிப்புணர்வு நாள் சிறப்பு வினாடி வினா நிகழ்ச்சி - மாவட்ட காசநோய் தடுப்பு மையம் - ஆகநல் வானொலி - பாலமுருகன் கணபதி - ஆகநல் அப்பு மாணவ மாணவிகள். Music by audionautix.com.

சேலம் மாவட்ட விவசாயிகள் கிரெயின்ஸ் வலைத்தளத்தில் பதிவுசெய்து பயனடையலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம் அவர்கள் தகவல் - தகவல் நேரம் - ஆனந்தி அண்ணாமலை 23.03.2023

சேலம் மாவட்ட விவசாயிகள் கிரெயின்ஸ் வலைத்தளத்தில் பதிவுசெய்து பயனடையலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம் அவர்கள் தகவல்

உலக வானிலை நாள் (மார்ச் -23) சிறப்பு நிகழ்ச்சி - பாலமுருகன் கணபதி - செந்தில்குமார் துரைசாமி 23.03.2023

உலக வானிலை நாளின் (மார்ச் -23) சிறப்புகள் குறித்து விளக்குகிறார்கள் நம் பாலமுருகன் கணபதி மற்றும் செந்தில்குமார் துரைசாமி ஆகியோர்.

உலக காடுகள் நாள் சிறப்பு நிகழ்ச்சி - பாலமுருகன் கணபதி - செந்தில்குமார் துரைசாமி 21.03.2023

உலக காடுகள் நாளான இன்று காடுகளின் முக்கியத்துவம் குறித்து நேயர்களுக்கு எடுத்துரைக்கிறார்கள் நமது பாலமுருகன் கணபதி மற்றும் செந்தில்குமார் துரைசாமி ஆகியோர்.

சாதனைப்பெண்மணி கல்பனா சாவ்லா அவர்களின் பிறந்தநாள் (மார்ச் 17) சிறப்பு நிகழ்ச்சி 17.03.2023

சாதனைப்பெண்மணி கல்பனா சாவ்லா அவர்களின் பிறந்தநாள் (மார்ச் 17) சிறப்பு நிகழ்ச்சியினை வழங்குகிறார் பாலமுருகன் கணபதி அவர்கள் 

அரக்கனும் மக்களும்- செந்தில்குமார் துரைசாமி -சிறுகதை நேரம் - தொடர் - 75 16.03.2023

காலநிலை மாற்ற விழிப்புணர்வினை நமக்கு வழங்குகிறது செந்தில்குமார் துரைசாமி அவர்களின் இச்சிறுகதை 

தளிர்த்திறன் திட்டம் (வாழ்க்கைத்திறன் கல்வி) குறித்த நேர்காணல் - திரு அரிஅரவேலன் அவர்கள் -அபராஜிதா அறக்கட்டளை -திரு செந்தில்குமார் துரைசாமி - நேர்காணல் நேரம் - தொடர் -19 16.03.2023

தளிர்த்திறன் திட்டம் (வாழ்க்கைத்திறன் கல்வி) என்றால் என்ன? இன்றைய சூழலில் வாழ்க்கைத்திறன் கல்வியின் அவசியம் என்ன என்பது குறித்த பல்வேறு தகவல்களை நேயர்களுக்கு வழங்குகிறது திரு அரிஅர வேலன் ஐயா அவர்களுடனான இந்த நேர்காணல் 

காலநிலை மாற்றம் விழிப்புணர்வு நிகழ்ச்சி - தொடர்-5 15.03.2023

காலநிலை மாற்றத்தை குறித்த பல்வேறு விழிப்புணர்வு தகவல்களை இந்நிகழ்ச்சி நேயர்களுக்கு வழங்குகிறது. நிகழ்ச்சியில் பங்குபெற்றோர்  செந்தில்குமார் துரைசாமி,ஹரிணி நாராயணசாமி, பாலமுருகன் கணபதி, கவியரசு மற்றும் அப்பு மாணவர்கள் 

காலநிலை மாற்றம் விழிப்புணர்வு நிகழ்ச்சி - தொடர்-4 07.03.2023

காலநிலை மாற்றத்தை குறித்த பல்வேறு விழிப்புணர்வு தகவல்களை இந்நிகழ்ச்சி நேயர்களுக்கு வழங்குகிறது. நிகழ்ச்சியில் பங்குபெற்றோர்  பாலமுருகன் கணபதி,செந்தில்குமார் துரைசாமி, பாலமுருகன் கணபதி மற்றும் அப்பு மாணவர்கள்

காலநிலை மாற்றம் விழிப்புணர்வு நிகழ்ச்சி - தொடர்-3 23.02.2023

காலநிலை மாற்றத்தை குறித்த பல்வேறு விழிப்புணர்வு தகவல்களை இந்நிகழ்ச்சி நேயர்களுக்கு வழங்குகிறது. நிகழ்ச்சியில் பங்குபெற்றோர் சிவப்பிரியா ராமகிருஷ்ணன், செந்தில்குமார் துரைசாமி, பாலமுருகன் கணபதி மற்றும் அப்பு மாணவர்கள்

புத்தகசோலை - தர்மம் - மாணவி வித்யாலட்சுமி - MSJ நூலகம் -அப்பு அறிவாலயம் - தொடர் -2 18.02.2023

இந்நிகழ்ச்சியில்  திரு.இறையன்பு  ஐயா அவர்களின் தர்மம்  என்ற புத்தகத்திற்கு மதிப்புரை வழங்குகிறார் நமது அப்பு அறிவாலய  எட்டாம் வகுப்பு மாணவி வித்யாலட்சுமி.  தர்மம் என்றால் என்ன எவையெல்லாம் தர்மமாகும் எனும் பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்த புத்தகம். இந்நிகழ்ச்சியில்  இந்நூலிற்கு மிக அழகாக மதிப்புரை தந்து இந்நூலை தேடிப்படிக்க மாணவர்களை ஊக்குவிக்கிறார் மாணவி வித்யாலட்...

பேரா இயற்கைப் பெற்றியே போற்றி - திருக்குறள் மந்திரம் -அர்ஜுன் வேல்முருகன் - எட்டாம் வகுப்பு மாணவர் -ஆகநல் பள்ளி - தொடர்-25 10.02.2023

புலவர் இரா.இளங்குமரனார் அவர்கள் எழுதிய 108 திருக்குறள் மந்திரங்களில் ஒன்றான "பேரா இயற்கைப் பெற்றியே போற்றி" என்ற திருக்குறள் மந்திரத்தினை மாணவர்களின் சிந்தனைக்கு எடுத்துரைக்கிறார்  நமது ஆகநல் பள்ளி எட்டாம் மாணவர் அர்ஜுன் வேல்முருகன்

பற்றது பற்றாப் பற்றே போற்றி - திருக்குறள் மந்திரம் -பூங்குழலி என்கிற ஹரிணிதா சுரேஷ் - எட்டாம் வகுப்பு மாணவி -ஆகநல் பள்ளி - தொடர் -24 09.02.2023

புலவர் இரா.இளங்குமரனார் அவர்கள் எழுதிய 108 திருக்குறள் மந்திரங்களில் ஒன்றான "பற்றது பற்றாப் பற்றே போற்றி" என்ற திருக்குறள் மந்திரத்தினை மாணவர்களின் சிந்தனைக்கு எடுத்துரைக்கிறார்  நமது ஆகநல்   பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி பூங்குழலி என்கிற ஹரிணிதா

நிலைபே றுணரும் நிலையே போற்றி - திருக்குறள் மந்திரம் -தமிழரசி என்கிற பிரியங்கா சங்கர் - எட்டாம் வகுப்பு மாணவி -ஆகநல் பள்ளி - தொடர் -23 08.02.2023

புலவர் இரா.இளங்குமரனார் அவர்கள் எழுதிய 108 திருக்குறள் மந்திரங்களில் ஒன்றான "நிலைபே றுணரும் நிலையே போற்றி" என்ற திருக்குறள் மந்திரத்தினை மாணவர்களின் சிந்தனைக்கு எடுத்துரைக்கிறார்  நமது ஆகநல் பள்ளி எட்டாம் மாணவி தமிழரசி என்கிற பிரியங்கா சங்கர்

வெற்றிக்கு வழி - ம.பொ .சிவஞானம் ஐயா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் - பாலமுருகன் கணபதி -கமலி சிவகுமார் - செந்தில்குமார் துரைசாமி - அப்பு மாணவர்கள் - தொடர் -1 06.02.2023

பத்தாம் வகுப்பு தமிழ் ஒரு மதிப்பெண் வினா விடைகள் - வெற்றிக்கு வழி  - தொடர்-1

புத்தகசோலை - மாணவரும் வாகனமும் - தமிழரசி என்கிற பிரியா சங்கர் - ப்ராட்லி நூலகம் - தொடர் -1 06.02.2023

இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் திரு.அருணாச்சலம் ஐயா அவர்களின் மாணவரும் வாகனமும் என்ற புத்தகத்திற்கு மதிப்புரை வழங்குகிறார் நமது ஆகநல் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி தமிழரசி என்கிற பிரியா சங்கர். சாலை விதிகளை பின்பற்றுவதன் அவசியத்தை எடுத்துரைக்கிறது இந்த நூல். இந்நிகழ்ச்சியில்  இந்நூலிற்கு மிக அழகாக மதிப்புரை தந்து இந்நூலை தேடிப்படிக்க மாணவர்களை ஊக்குவிக்கிறார் மாணவி பிரியா சங்கர். 

காலநிலை மாற்றம் விழிப்புணர்வு நிகழ்ச்சி - தொடர்-2 03.02.2023

காலநிலை மாற்றத்தை குறித்த பல்வேறு விழிப்புணர்வு தகவல்களை இந்நிகழ்ச்சி நேயர்களுக்கு வழங்குகிறது. நிகழ்ச்சியில் பங்குபெற்றோர் சிவப்பிரியா ராமகிருஷ்ணன், செந்தில்குமார் துரைசாமி, பாலமுருகன் கணபதி மற்றும் அப்பு மாணவர்கள்

காலநிலை மாற்றம் விழிப்புணர்வு நிகழ்ச்சி - தொடர்-1 20.01.2023

 காலநிலை மாற்றத்தை குறித்த பல்வேறு விழிப்புணர்வு தகவல்களை இந்நிகழ்ச்சி நேயர்களுக்கு வழங்குகிறது. நிகழ்ச்சியில் பங்குபெற்றோர் சிவப்பிரியா ராமகிருஷ்ணன், செந்தில்குமார் துரைசாமி, பாலமுருகன் கணபதி மற்றும் அப்பு மாணவர்கள்  

தேனீ வளர்ப்பு மற்றும் அதன் பயன்கள் - பாலமுருகன் கணபதி - உங்களுக்கு தெரியுமா - தொடர் -6 04.01.2023

தேனீ வளர்ப்பு மற்றும் அதன் பயன்களை பற்றி இந்நிகழ்ச்சியில் கூறுகிறார் பாலமுருகன் கணபதி அவர்கள் 

புத்தாண்டு (2023) சிறப்பு நாடகம் - ஆகநல் வானொலி - செந்தில்குமார் துரைசாமி- கனிஷ் விஜயகுமார் 02.01.2023

ஆகநல் வானொலி நேயர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் 

புத்தாண்டு சிறப்பு சிறுகதை - செந்தில்குமார் துரைசாமி - சிறுகதை நேரம் - தொடர் - 74 02.01.2023

நேயர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துகள் 

காந்தங்கள் -பாலமுருகன் கணபதி - உங்களுக்கு தெரியுமா? - தொடர் - 5 16.12.2022

காந்தங்கள் குறித்த தகவல்களை வழங்குகிறார் பாலமுருகன் கணபதி 

வித்தியாசமான நரி - செந்தில்குமார் துரைசாமி - சிறுகதை நேரம் - தொடர் - 73 16.12.2022

தேவையில்லாத வேலைகளை செய்வது, தேவையில்லாத நேரங்களில் பேசுவது நமக்கு துன்பத்தையும் தரக்கூடும் என்பதை விளக்குகிறது இக்கதை 

பூஜ்ஜிய நண்பன் - மோனிஷா ஆறுமுகம் - சிறுகதை நேரம் - தொடர் - 72 15.12.2022

எண்களில் பூஜ்யத்தின் முக்கியத்துவத்தையும், யாரையும் எதற்காகவும் எதிலும் ஒதுக்கி வைத்தால் கூடாது என்ற நீதியையும்  இக்கதையின்  மூலமாக நேயர்களுக்கு  விளக்குகிறார் மோனிஷா ஆறுமுகம் அவர்கள் 

அளவறிந் துண்ணும் அறிவே போற்றி - திருக்குறள் மந்திரம் -வான்மதி என்கிற ஸ்ரீவர்ஷினி ஸ்ரீதயாளன் -ஏழாம் வகுப்பு மாணவி -ஆகநல் பள்ளி - தொடர் -22 14.12.2022

புலவர் இரா.இளங்குமரனார் அவர்கள் எழுதிய 108 திருக்குறள் மந்திரங்களில் ஒன்றான "அளவறிந் துண்ணும் அறிவே போற்றி" என்ற திருக்குறள் மந்திரத்தினை மாணவர்களின் சிந்தனைக்கு எடுத்துரைக்கிறார்  நமது ஆகநல்   பள்ளி ஏழாம் வகுப்பு மாணவி வான்மதி என்கிற ஸ்ரீவர்ஷினி ஸ்ரீதயாளன்

Hallgasd a(z) ஆகநல் வானொலி (Aahanal Vaanoli) podcastot a Replaióban

Rádió és podcastok egy alkalmazásban - ingyen és regisztráció nélkül. Telepítsd még ma, és ne maradj le a premierről

Letöltés a Google Play-ről

A Replaio nem podcastkiadó; a műsorok nevei, borítóképei és hanganyagai a szerzőiket illetik, és nyilvános RSS-csatornákon keresztül terjednek.