Raja Nagarajan
ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales)
Ainkaran, popularly known as Ganesha, is a very popular God among all age groups. This podcast uses Ainkaran as a Narrator for telling Folklores and Fables from all parts of the world . These have been passed on from generation togeneration through word of mouth. Hence,these are called”கர்ணபரம்பரை கதைகள்”Email your comments to:ainkaran2020@gmail.com
Skapare
Raja Nagarajan
Kategori
Poddens webbplats
Senaste avsnittet
15 apr 2026
Var kan du lyssna?
Poddar i appen Replaio Radio Kommer snartPoddar kommer snart till appen. Installera nu och bli först med att uppleva ett helt nytt sätt att lyssna på poddar
Avsnitt
பதினாறாவது கதை:மார்டினின் அற்புத முதுகுப் பை(Backpack) 22.07.2020 13:13
இது ஒரு டென்மார்க் நாட்டுக் கதை. மார்டின் என்ற ஒரு ராணுவ வீரரையும் அவர் எப்போதும் கூடவே வைத்திருக்கும் முதுகுப் பையையும்(Backpack) பற்றிய கதை. கதையில் குட்டி பிசாசுகளும் வரும்
பதினைந்தாவது கதை:இவான் கற்றுக்கொண்ட பறவை மொழி 15.07.2020 13:35
இது ஒரு ரஷ்ய நாட்டுக் கதை. இவான் என்ற ஒரு சிறு பையன் எப்படி பறவைகளின் மொழியை கற்றுக் கொண்டு ஒரு தேசத்துக்கு ராஜாவாக ஆனான் என்பது தான் கதை
பதினாலாவது கதை:நட்புக்கு ஒரு உதாரணம்:டாமன்-பயித்தியாஸ் 08.07.2020 13:31
இந்த கதை 3000 ஆண்டுகளுக்கு முன் கிரேக்க நாட்டில் நடந்ததாக சொல்லப்படும் கதை. சொன்னவர்-சிஸரோ என்ற பெரிய அறிவாளி. ரத்த சம்பந்தமில்லாத டாமன்-பயித்தியாஸ்,என்ற இரண்டு வாலிபர்களின் நட்பை பற்றிய கதை "உயிர் காப்பான் தோழன்" என்ற பழமொழிக்கு விளக்கம்-இவர்களுடைய நட்பு முழுமையான நட்புக்கு (Absoulute Friendship) இவர்களின் நட்பைத் தான் அளவு கோலாக(yardstick) எடுத்துக் கொள்வார்கள்
பதிமூன்றாவது கதை:மேலும் 3 அடுக்குக் கதைகள்-1.ராமு ஆசைப் பட்ட மத்தளம்: 2.முனிவரும் எலியும்: 3.பாட்டியும் காகமும் 01.07.2020 17:10
கேட்போர்கள் வேண்டுகோளுக்காக, மேலும் 3 அடுக்குக் கதைகள்(cumulative stories) இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. 1.ராமு ஆசைப்பட்ட மத்தளம்(8 நிமிடங்கள்) 2.முனிவரும் எலியும்(4 நிமிடங்கள்) 3.பாட்டியும் காகமும்(4 நிமிடங்கள்) மூன்று கதைகளும் இந்திய நாட்டுக் கதைகள். முதல் 2 கதைகள்-சங்கிலி தொடர் கதைகள் மூன்றாவது கதை ஒரு வட்டக் கதை
பன்னிரெண்டாம் கதை: 2 அடுக்குக் கதைள்:(cumulative stories) 1.கேய்கோ கொடுத்த புகார்:2.கோழியும் அதன் குஞ்சும் 24.06.2020 13:16
இங்கே சொல்லப்பட்டிருக்கும் 2 கதைகளும் ஒரு வித்தியாசமான "கதை வகைகளை"சேர்ந்ததன. ஆங்கிலத்தில் Cumulative Tales என்று சொல்வார்கள். தமிழில் "அடுக்குக் கதைகள்" என்று சொல்லலாம். 2 முக்கியமான பிரிவுகள்: 1. சங்கிலி தொடர் கதைகள் 12.வட்டக் கதைகள். முதல் வகையில் கதை சம்பவங்கள் சங்கிலி போல் தொடரும். இரண்டாவது வகையில் கதை ஆரம்பித்த இடத்திற்கு திரும்பி வரும். முதல் கதை:சங்கிலி தொடர் கதை,...
பதினோராவது கதை: அடுப்புக்கரி செய்பவர் (charcoal maker) ராஜாவுக்கு சொன்ன புதிர் 17.06.2020 10:13
இது ஸ்பெய்ன் நாட்டின் ஒரு பகுதியான கேட்டலானில் சொல்லப்படும் கதை. ஒரு அடுப்புக் கரி செய்பவர்(Charcoal Maker) அவருடைய ராஜாவுக்கு சொன்ன புதிர். ராஜாவை எங்கே, எப்படி சந்தித்தார்? என்ன புதிர் சொன்னார்? என்பது தான் கதை. முந்திய கதையின் புதிருக்கான விடையும் இதில் சொல்லப்பட்டிருக்கிறது.
பத்தாவது கதை: மூன்று புதிர் கதைகள் 10.06.2020 10:54
இதில் 3 குட்டிக் கதைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. 1.கடவுள் கொடுத்த ஒரே ஒரு வரம்: 2.சிங்க ராஜாவின் வாய் துர் நாற்றம்: 3.ஒரு ரூபாய்க்கு 4 பொருள்கள்: ஒவ்வொரு கதை முடிவிலும், ஒரு கேள்வி கேட்கப்பட்டிருக்கும். விடையை நீங்கள் தான் சொல்ல் வேண்டும்......
ஒன்பதாவது கதை: ஒரு அடி நீள மூக்குள்ள டம்போசா இளவரசி 03.06.2020 15:35
இது ஒரு பிரன்சு கானடா (குபெக்) நாட்டுக் கதை. டமபோசா நாட்டு இளவரசி ரொம்ப அழகானவள். ஆனால் அவளுக்கு மூக்கு நீளம்-ஒரு அடி நீளம். பிறந்த போதா? இல்லை-பின் எப்படி வந்தது? விடை கதையில்............
எட்டாவது கதை:அரசன் கனுவும் அரக்கன் கனுவும் 26.05.2020 12:51
இது ஒரு மேற்கு ஆப்ரிக்கா நாட்டுக் கதை: கனு என்ற ஒரே பெயருள்ள இரண்டு பேரை பற்றிய கதை. ஓரு கனு பூமியில் இருக்கும் அரசன். நல்லவன் இன்னோரு கனு ஆகாயத்தில் இருக்கும் அரக்கன்..கெட்டவன் அரசன் கனுவின் மகளை அரக்கன் கனு தூக்கி கொண்டு போய்விட்டான் அரசன் கனு தன் நாட்டில் இருக்கலாம் என்று சொன்ன 4 "வெளியாட்கள்" அரசன் மகளை மீட்டி கொண்டு வந்தார்கள். யார் இவர்கள்?...... எப்படி மீட்டார்கள்? கதையை கேளுங்கள்.......
ஏழாவது கதை:சாத்தானும் கடவுள் பக்தனும் 19.05.2020 22:37
ஆதி கால முதலாக,சாத்தானின் குறிகோள் மக்களை ஆசை காட்டி கெட்ட வழிகளில் செல்ல வைத்து, கடவுளிடமிருந்து பிரிப்பது தான். இந்த கதையும் சாத்தானுக்கும் ஒரு கடவுள் பக்தனுக்கும் நடக்கும் போராட்டத்தை பற்றியது. யாருக்கு வெற்றி? சாத்தானுக்கா ? பக்தனுக்கா? கதையை கேளுங்கள்........
ஆறாவது கதை: ஐந்து சீன சகோதரர்கள் 13.05.2020 9:47
இது ஒரு சீன நாட்டுக் கதை. ஒரே மாதிரி உருவமுள்ள ஐந்து சீன சகோதரர்களை பற்றிய கதை. மரண தண்டனை விதிக்கப்பட்ட மூத்த சகோதரனை மற்ற நாலு பேரும் எப்படி காப்பாற்றினார்கள் என்பது கதை
ஐந்தாவது கதை:மந்திரவாதியும் வேலைக்காரனும் 07.05.2020 11:28
இது ஒரு பிரான்ஸ் நாட்டுக் கதை. ஒரு மந்திரவாதியையும் அவனிடம்வேலை செய்ய வந்த ஒரு சிறுவனையும் பற்றிய கதை. மாய ஜாலங்கள் தெரிந்த ஒரு கெட்ட மந்திரவாதியை ஒரு சிறுவன் தன் புத்தி சாதுர்யத்தால் எப்படி தோற்கடித்தான் என்பது தான் கதை email your comments to: ainkaran2020@gmail.com
நான்காவது கதை:இளவரசி ஜமீலாவும் மூன்று இளவரசர்களும் 29.04.2020 12:58
இது ஒரு அரபு நாட்டுக் கதை. ஜமீலா, ஒரு அழகான,புத்திசாலியன இளவரசி 3 இளவரசர்கள்-அப்துல்லா,கரீம்,ஜமால்-அவளை கல்யாணம் பண்ணிக்க ஆசைப் பட்டார்கள் ஜமீலாவுக்கு ஜமால் பேரில் ஆசை. எப்படி அவள் ஆசை நிறைவேறிய து...........என்பது தான் கதை அரபு நாட்டுக் கதை ஆயிற்றே- மாய கண்ணாடி,பறக்கும் கம்பளம்,மாய பழம்-எல்லாம் வரும்
மூன்றாவது கதை: அகிம்பாவும் மாய பசுவும் 22.04.2020 11:11
இது ஒரு ஆப்ரிக்க நாட்டு கதை. வெகுளியான ஏழை அகிம்பாவுக்கு கடவுள் அருளால் கிடைத்த மாய பொருள்களை ஏமாற்றி பறித்து கொண்ட பும்பாவிடமிருந்து எப்படி அகிம்பா திரும்ப அடைந்தான்...... கதை இதோ........
இரண்டாவது கதை:புத்திசாலி பாட்டி 22.04.2020 14:10
இது ஜப்பான் நாட்டு கதை.ஒரு ஊரின் பிரபு,65 வயதானவர்கள் உபயோகமில்லாதவர்கள் என்று சொல்லி அவர்களை காட்டில் விடும்படி உத்தரவு போட்டான் . பக்கத்து நாட்டு அரசன் புதிர்கள் போட்டு நாட்டை கைப்பற்ற முயற்ச்சி பண்ணும் போது அந்த புதிர்களுக்கு விடை அளித்து நாட்டை காப்பாற்றிய்து யார்? ஒரு 67 வயதான பாட்டி..........அவர்கள் கதை
ஐங்கரனின் கர்ண பரம்பரைக் கதைகள் -ஒரு அறிமுகம் 13.04.2020 8:43
இந்த அறிமுக பகுதியில் 3 விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஐங்கரனின் அர்த்தம், "ஒற்றை கொம்பனுக்கு விளக்கம்", மற்றும் கர்ணபரம்ப்பரை கதைகள் என சொல்லப்படுவதின் காரணம்
Liknande poddar
Replaio är ingen poddutgivare; programnamn, omslag och ljud tillhör sina upphovspersoner och distribueras via offentliga RSS-flöden